உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி கோவில்களில் கவர்னர் சுவாமி தரிசனம்

திருச்சி கோவில்களில் கவர்னர் சுவாமி தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில், தமிழக கவர்னர் ரவி, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தமிழக கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக, சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். நேற்று திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற அவருக்கு, பட்டச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கி, வரவேற்றனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில், கோவில் பணியாளர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கவர்னரின் குடும்பத்தினர், கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கி மகிழ்ந்தனர். கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதிகளுக்கு சென்று கவர்னரும், அவரது குடும்பத்தினரும் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு, திருச்சியில் ஓய்வெடுக்கும் கவர்னர், இன்று முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அங்கிருந்து மதுரை செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மே 30, 2025 11:13

வயசான காலத்தில் தேவையில்லாத அரசியல் பண்ணாமல் தேமே என்று இப்படி காசி ராமேஸ்வரம் என்று போய் பொழுதைக் கழித்தால் தான் இவருக்கு நல்லது!


சந்திரன்,போத்தனூர்
மே 31, 2025 05:38

எப்படி உன்னைப் போல் அறிவாலயத்தில் அடைப்பு எடுத்து பொழுதை கழிக்க வேண்டும் என்றுதானே!


RAAJ68
மே 30, 2025 08:47

நீங்களும் முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று கொண்டு மக்கள் பணத்தை வீணடித்து பொழுதை கழிக்கிறீர்கள். 20 ரூபாய் கொடுத்து ஒரு பாக்கெட் பால் வாங்க முடியாமல் ரொட்டி வாங்க முடியாமல் ஏழைகள் பிச்சை எடுக்கிறார்கள்.


இளங்கோவன்,திருப்பத்தூர்
மே 31, 2025 05:40

ஆமா நீ எந்த ஊர்ல எந்த தெருவுல ... எடுக்கிற?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை