உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நாட்டு துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய ரவுடி கைது

நாட்டு துப்பாக்கியை காட்டி போலீசை மிரட்டிய ரவுடி கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழரசன், 40. பிரபல ரவுடியான இவர், நேற்று முன்தினம் இரவு அம்மன் நகர் பகுதியில், கையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, அவ்வழியே சென்றவர்களை மிரட்டி உள்ளார். போலீசார் அங்கு சென்று, தமிழரசனை பிடிக்க முயன்றபோது, போலீசாரையும் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி