செம்மரம் வெட்ட முயன்றதாக பஸ்சில் 10 பேர் மடக்கி பிடிப்பு
வேலுார்:செம்மரம் வெட்ட, அரசு பஸ்சில் ஆந்திர மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்ததாக, 10 பேரை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், ஒரு கும்பல் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் செல்வதாக, குடியாத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், வேலுாரிலிருந்து, கே.ஜி.எப்., செல்லும் அரசு பஸ்சை மடக்கி சோதனை செய்தனர்.அதில், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த, 10 பேர், கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன், செம்மரம் வெட்ட ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தது தெரிந்தது.இதையடுத்து, 10 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.