மின் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
வேலுார்:வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்., சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் முத்துக்குமரன், 45, மற்றும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி அசோக்குமார், 55, ஆகியோர், நேற்று மதியம், 2:00 மணிக்கு அப்பணியில் ஈடுபட்டனர்.இரும்பு மின் கம்பத்தை துாக்கி நிறுத்தும்போது, மின் கம்பம் தடுமாறி பக்கத்தில் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.