உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / நின்றிருந்த லாரி மீது ஜீப் மோதல் செருப்பு வியாபாரிகள் 3 பேர் பலி

நின்றிருந்த லாரி மீது ஜீப் மோதல் செருப்பு வியாபாரிகள் 3 பேர் பலி

வேலுார்: சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சவுபர் சாதிக், 33, அனீஸ் அலி, 22, திருவான்மியூரை சேர்ந்தவர் உஸ்மான், 33, கொடுங்கையூரை சேர்ந்தவர் மாலிக் பாஷா, 35. அனைவரும் செருப்பு வியாபாரிகள். சென்னையிலிருந்து நேற்று அதிகாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொலிரோ ஜீப்பில் பெங்களூருவிற்கு மொத்தமாக செருப்பு கொள்முதல் செய்ய சென்றனர். அதிகாலை, 4:30 மணியளவில், வேலுார் மாவட்டம், கருகம்-புத்துார் அருகே சென்றபோது, நிலை தடுமாறிய ஜீப், சாலை தடுப்பு சுவரில் மோதி, சர்வீஸ் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் ஜீப் நொறுங்கி சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி சென்ற சவுபர் சாதீக் மற்றும் அனீஸ் அலி, உஸ்மான் ஆகிய, 3 பேரும் பலியாகினர். மாலிக் பாஷா படுகாயத்துடன், வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை