ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து - பெங்களூரு வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்தனர். ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியில் இருக்கையின் அடியில் 15 மூடையில் 450 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதனை பறி முதல் செய்து தாசில் தாரிடம் ஒப்படைத்து, விசாரிக்கின்றனர்.