மூன்று பேர் முகமூடி கும்பல் மூதாட்டியை தாக்கி கொள்ளை
வேலுார்: அரியூர் அருகே, வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த முகமூடி கும்பலை போலீசார் தேடுகின்றனர். வேலுார் மாவட்டம், அரியூர் அடுத்த ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் அம்சா, 70. இவரது மகன், மருமகள், இரு பேரக்குழந்தைகள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு வீட்டின் பின்பக்கம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக மூன்று பேர் கொண்ட முகமூடி கும்பல், அம்சாவின் வீட்டிற்குள் நுழைந்தது. ஒரு அறையில் துாங்கிக் கொண்டிருந்த அம்சாவை தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 4 சவரன் தங்கச் செயினை கொள்ளையடித்து தப்பியது. வீட்டின் பிற அறைகளை உட்புறமாக பூட்டி, துாங்கிக் கொண்டிருந்தவர்களை அந்த கும்பல் ஒன்றும் செய்யவில்லை. அரியூர் போலீசார், அந்த முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.