உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.பாஞ்சாலம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

வி.பாஞ்சாலம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

விழுப்புரம் : திண்டிவனம் அடுத்த வி.பாஞ்சாலம் கிராமத்தில் ஏழு கோவில்களுக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. வி.பாஞ்சாலம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி , சீனுவாச பெருமாள், கதம்பவனஈஸ்வரர், கருமாரியம்மன், முத்தாலம்மன் , நவக்கிரக ஆலயங்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 5மணிக்கு கணபதி பூஜையுடன் வேள்விகள் துவங்கின. நாளை காலை இரண்டாம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஏழு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை