உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்விரோத தகராறு; 4 பேர் கைது

முன்விரோத தகராறு; 4 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ், 25; இவரது நண்பர் யுவராஜ், 25; இருவரும் சில தினங்களுக்கு முன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றனர். இவர்களுக்கும், நாப்பாளைய தெருவை சேர்ந்த நிவேஷ் நெய்வின், 24; என்பவரோடு வேளாங்கண்ணியில் தகராறு ஏற்பட்டது.கடந்த 31ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் தினேஷ், யுவராஜ், நிவேஷ நெய்வின், ஜெபஸ்டின்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !