உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மயிலம் : புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வேலுார் வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பெரமண்டூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த மொபட்டை சோதனை செய்தபோது, 144 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர், வேலுார் மாவட்டம், சல்வன்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 30; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, மது பாட்டில் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ