உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்

அரசு விரைவு பஸ் விபத்து: டிரைவர் உட்பட 6 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளாகி டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.சென்னை, புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 53; டிரைவர். இவர் நேற்று அரசு விரைவு பஸ்சில் 39 பயணிகளை ஏற்றிக்கொண்டு சித்துார் - கடலுார் வழியாக பெங்களூருலிருந்து - சிதம்பரம் நோக்கிச் சென்றார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமம் அருகே நேற்று அதிகாலை 4:10 மணியளவில் சென்றபோது பஸ் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ராகவன் வாய்க்காலில் இறங்கியது.அதில் டிரைவர் ராஜசேகர், பயணிகள் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மதுசூதனன், கடலுார் மாவட்டம், அண்ணாநகர் பாரி, 34; உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் மாற்று பஸ் மூலம் சிதம்பரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை