நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு எம்.பி.,வாழ்த்து
திண்டிவனம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர், அ.தி.மு.க.,எம்.பி.,யிடம் வாழ்த்து பெற்றார். மேல்மலையனுார் ஒன்றியம், கொச்சாலுார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. மரம் ஏறும் தொழிலாளி. இவரது மகன் கதிர்வேல். இவர் நீட் தேர்வில் 576 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றார். இவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லுாரியில் சேர்வதற்கு ஆணை வந்துள்ளது.இதை தொடர்ந்து மாணவர் கதிர்வேல் திண்டிவனத்திலுள்ள சண்முகம் எம்.பி.,யை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மேல்மலையனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.