சாணக்யா பள்ளியில் ஆசிரியர் தின விழா
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.சாணக்யா கல்விக் குழுமத் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். ஆசிரியர் ஷாலினி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம் சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் அபிராமி நன்றி கூறினார்.