உள்ளூர் செய்திகள்

விநாயகர் வீதியுலா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண் கொடுத்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. கண்டாச்சிபுரம், அங்குராயநத்தம், மடவிளாகம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை