உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

விழுப்புரம்:விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்லியோகிங், 47; விழுப்புரம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர்.பொங்கல் விடுமுறையால், 14ம் தேதி குடும்பத்தோடு பெங்களூருவில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.அதில் வைத்திருந்த 18 சவரன், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் திருடு போயிருந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி