உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மாலை குச்சிபாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கனுாரிலிருந்து 2 பேர் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தனர்.போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 90 மி.லி., அளவுள்ள 100 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அருகே உள்ள பாடியை சேர்ந்த அஜித்குமார், 26; ஆனந்தராஜ், 27; என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை