ஆன்லைன் லாட்டரி விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது
திண்டிவனம், : திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் போலீசார், நேற்று முன்தினம் மாலை, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், சந்ததேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், பிடிபட்ட விழுப்புரம், சாலாமேடு, இ.பி.காலனியைச் சேர்ந்த செந்தில்குமார், 48; திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த சரவணன், 40; ஆகிய இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றது தெரியவந்தது. உடன் அவர்களிடமிருந்த 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.