உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் 3 மாணவியர் மயக்கம் விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

அரசு பள்ளியில் 3 மாணவியர் மயக்கம் விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தேவநாதன் மகள் சரண்யா,5: முருகன் மகள் தமிழரசி,15: குன்னத்துார் தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் சமிக்ஷா ஆகியோர், நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தனர்.அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் சங்கர், உடனடியாக மருத்துவக் குழுவினருக்கும், மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தார். விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மயக்கமடைந்த மாணவிகள் மற்றும் பிற மாணவர்களை பரிசோதித்தனர். அதில், மாணவிகள் மூவருக்கும் விஷக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன் தலைமையிலான குழுவினர், பள்ளி வளாகம் மற்றும் குண்டலிபுலியூர் கிராம குடிநீர் தொட்டிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யுமாறு ஊராட்சி செயலாளரிடம் அறிவுறுத்தினர்.கெடார் போலீசார், பள்ளி மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், மாணவியர் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை குடித்ததாக தெரிவித்தனர்.அந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பரிசோதித்ததில், குளோரின் அதிகம் கலந்திருப்பது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ