உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 65; அவரது மகன்கள் மைக்கல்ராஜ், 34; மகிமை டேவிட், 30; மற்றும் மைக்கல்ராஜ் மனைவி பேரோஸ், 32; ஆகியோர், நேற்று முன்தினம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் ஆனந்தராஜ், 26; என்பவரது ஆட்டோவில், விழுப்புரம் மேல்தெரு சென்னை நெடுஞ்சாலையில் சென்றனர்.அப்போது, டிரைவர் சடன் பிரோக் போட்டதில், ஆட்டோ கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேரும் படுகாயமடைந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !