சிகரெட் பிடித்த தகராறு ஒருவர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி குளக்கரை வீதியைச் சேர்ந்தவர் மணிபாலன், 28; அதே தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 32; கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று, பாலச்சந்திரன் தனது வீட்டின் முன் சிகரெட் பிடித்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த மணிபாலன் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், மணிபாலனை தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, பாலசந்திரனை கைது செய்தனர்.