உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீக்காயமடைந்த மூதாட்டி பலி

தீக்காயமடைந்த மூதாட்டி பலி

திண்டிவனம்: விளக்கிலிருந்த தீ பற்றியதால் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் மனைவி கங்கா, 41; இவரது தாயார் கஸ்துாரி, 62; இவருக்கு பார்வை குறைபாடு உள்ளது.கடந்த 20ம் தேதி காலை 10:30 மணியளவில் வீட்டு வாசற்படியில் ஏற்றி வைத்திருந்த விளக்கின் அருகே கஸ்துாரி நின்றபோது நைட்டியில் தீ பிடித்து படுகாயம் அடைந்தாா்.சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அதிகாலை இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !