உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம்

அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் அலங்காரம்

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல் சந்தானம், மேலாளர் மணி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி