அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி விளம்பர அலங்கார வளைவு வைத்திருந்த கொளத்துாரை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி,32; பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சேகர் மகன் பாலாஜி,29; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.