உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அத்தியூர் திருக்கை சாலை மோசம்

அத்தியூர் திருக்கை சாலை மோசம்

விழுப்புரம் : அத்தியூர் திருக்கை சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்திற்கு, அரியலுார் திருக்கை - பனமலைப்பேட்டை சாலையில் இருந்து தார் சாலை செல்கின்றது. இந்த சாலை கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இச்சாலை மழைக்காலங்களில் குட்டை போன்று தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி