வானூர் அரசுக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வானுார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. நான்காம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ.,சக்கரபாணி கலந்து கொண்டு, ஒழுக்கத்துடன் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்; மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; என அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியை கவுரவ விரிவுரையாளர் செண்பகக்குழலி தொகுத்து வழங்கினார். இணை பேராசிரியர் அருளமுதம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.