உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : மனைவியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அடுத்த சின்னகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 28; கூலித் தொழிலாளி. இவரது மனைவியிடம் அப்பகுதியைச் சேர்ந்த கமல், 25; ராகுல், 23; விஷ்வா, 21; அபிஷேக், 21; ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.இதனை தட்டிக்கேட்ட கலைவாணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து கலைவாணன் கொடுத்த புகாரின் பேரில் கமல், இவரது தாய் சின்னபொண்ணு, ராகுல், விஷ்வா, அபிஷேக், குமார் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ