வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம்: வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் சேதுபதி, 23; இவர், தனது வீட்டின் அருகே வளவனுார் பக்கமேட்டை சேர்ந்த ஜீவா, 28; மற்றும் மூன்றுபேர் பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஜீவா உள்ளிட்ட 4 பேர் சேதுபதியை திட்டி தாக்கினர். வளவனுார் போலீசார், ஜீவா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.