உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்கு

விழுப்புரம்; மது குடித்தபோது வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்தவர் துளசி, 26; இவர், தனது நண்பர்களான கண்டமானடியை சேர்ந்த சம்பத், 22; சக்திவேல், 20; ஆகியோருடன் சேர்ந்து, ஜானகிபுரம் பனந்தோப்பு அருகில் மது குடித்தார். அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சம்பத், சக்திவேல் ஆகியோர் சேர்ந்து துளசியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பத், சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை