விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டை அருகே சோடா பாட்டிலால் விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுாரைச் சேர்ந்தவர் சீதாராமன், 49; விவசாயி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக உளுந்துார்பேட்டை சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக இரவு 7:00 மணியளவில் பஸ்சில் வந்து பூவனுார் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு வந்த வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனகோடி மகன் சரத், 35; முன்விரோதம் காரணமாக சீதாராமனை கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து தாக்கினார். சீதாராமன் படுகாயமடைந்தார். சீதாராமன் அளித்த புகாரின் பேரில் சரத் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.