வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு
வானுார்: வீட்டில் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். வானுார் அடுத்த இரும்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவரது வீட்டில் 4 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.