திண்டிவனத்தில் தினசரி அங்காடி கட்ட பூமி பூஜை
திண்டிவனம்: திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தில் ரூ.4.23 கோடி செலவில் தினசரி அங்காடி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. திண்டிவனம் நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடி மதிப்பில், பழைய பஸ் நிலையத்தில், தினசரி அங்காடி அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், பொறியாளர் சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி, கவுன்சிலர்கள் அரும்பு குணசேகரன், பிர்லா செல்வம், ஷபியுல்லா, பாஸ்கர், மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், சின்னதுரை, நகர துணை செயலாளர் கவுதமன், மகளிர் அணி சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.