உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம்- தாய் புகார்

மகள் மாயம்- தாய் புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அருகே ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் வித்யா,26; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் டேட்டா என்ட்ரி மையம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். வழக்கம் போல், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து பணிக்கு சென்ற வித்யா மீண்டும் வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ