பெருமாள் கோவிலில் தனுர் மாத பூஜைகள்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில் உள்ள கனகவல்லி நாயக சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், தனுர் மாத பூஜை நடந்தது. நேற்று காலை 11.00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்ம பெருமாள் உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் லட்சுமி நரசிம்மர் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வாணியம்பாளையம் சஞ்சீவிராயர் கோவிலில், காலை 12.00 மணிக்கு மூலவர் சஞ்சீவராயருக்கும், உற்சவர் சஞ்சீவிராயருக்கு திருமஞ்சனம் நடந்தது. மூலவர், உற்சவர் சஞ்சீவிராயர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ப.வில்லியனூர் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் கோவிலில், மதியம் 2.00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமானுக்கும் திருமஞ்சனம் நடந்தது. மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.