தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
வானுார்: கிளியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு பொது அறிவு திறனை மேம்படுத்தவும் விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் விதத்திலும் விரிவான தகவல்கள், 'தினமலர்-பட்டம்' இதழ் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி, கிளியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் தாட்சாயிணி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன் வரவேற்றார். கிளியனுார் தி.மு.க., மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் புஷ்பராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வேலு ஆகியோர், மாணவர்களுக்கு தினமலர்-பட்டம் இதழை வழங்கி பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரசன்னா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரசாத், தொண்டரணி அணி துணை அமைப்பாளர்கள் தங்கவேல், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சந்தியா நன்றி கூறினார்.