மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட தி.மு.க., நிவாரண உதவி
திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தி.மு.க.,சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. திண்டிவனம் நகராட்சி 27 வது வார்டு பொது மக்களுக்கு,முதல்வர் ஸ்டாலின் வந்த போது, பொது மக்கள் பலருக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து விடுபட்ட பொது மக்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சேகர் நிவாரண பொருட்களை வழங்கினார். வார்டு கவுன்சிலர் ஷபியுல்லா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், அவைத்தலைவர் ரவிச்சந்திரன், வர்த்தகர் அணி பிரகாஷ், நகர துணைசெயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.