தி.மு.க., அமைப்பு சாரா அணி நலத்திட்ட உதவி வழங்கல்
செஞ்சி: நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் தி.மு.க., அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி முன்னிலை வகித்தனர். நாட்டார்மங்கலம் ஊராட்சி தலைவர் மாரியம்மாள் மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சேகர், பொது மக்களுக்கு அரிசி, சேலை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, துணைச் செயலாளர்கள் பாண்டியராஜன், கண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.