உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் இறந்தார்.விழுப்புரம், ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 67; கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 12ம் தேதி மனநலம் பாதிப்புக்காக எடுத்து கொள்ளும் மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை