கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் பொங்கல் விழா
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் தை பொங்கல் விழா கொண்டாடினர். வருவாய்த்துறை சார்பில் நடந்த இந்த விழாவில் செங்கரும்புடன், புதுபானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் கோலப்போட்டி நடந்தது. கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு கோலமிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர்.