உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்

புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்

திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தில், அரசு பள்ளி பின்புறமுள்ள விவசாய வாய்க்காலில், 100 நாள் பணியாளர்கள் நேற்று வேலை செய்தனர். இதில், தொட்டிக்குடிசை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல், 1:00க்கு, லட்சுமணன் மனைவி தேவகி, 53, மண் வெட்டியால் மண்ணை கொத்தியபோது, பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது சிதறியது.அதில், தேவகி, சுந்தரி, 45, தனம், 50, கலைவாணி, 40, ஆகியோருக்கு கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், தடவியல் நுண்ணறிவு பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.போலீசார் கூறுகையில், 'காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்துவற்காக நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை