உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்துக் கழகத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதி

அரசு போக்குவரத்துக் கழகத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதி

விழுப்புரம்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினர்.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், விழுப்புரத்தைச் சேர்ந்த இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட நிதியை, இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இறந்த தொழிலாளர்கள் 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பணியின்போது இறந்த ஒரு தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.மேலாண் இயக்குநர் குணசேகரன், தலைமை தணிக்கை அலுவலர் சிவக்குமார் ஆகியோர், தொழிலாளர்கள் குடும்பத்திற்கு காசோலையை வழங்கினர். 6 மண்டலங்களைச் சேர்ந்த தொழிற் சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி