சப் கலெக்டர் ஆபீசில் குறைகேட்பு நாள்
திண்டிவனம்; திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு, சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர். சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் உடனிருந்தார்.