மாற்றுத் திறனாளிகள் கவுரவிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத் திறனாளிகள் கவுரவிக்கப்பட்டனர். விழுப்புரத்தில், உலக உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத் திறனாளிகள் தினம் கடை பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத் திறனாளிகள் கவுரவிக்கப்பட்டனர். விழுப்புரம் காவல் துறை சார்பில் அந்த மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சுவீட் பாக்ஸ் வழங்கி கவுரவித்தனர்.