உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

செஞ்சி : குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வீரபாண்டியன், 45; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 8ம் தேதி மாலை தனது மனைவி யசோதையிடம், 36; குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், குத்து விளக்கால் கையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். யசோதை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை