முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சக்திவேல் முருகன் சுவாமிகளுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.