உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை இரண்டு கால பூஜை, கோ பூஜை, விஸ்வரூபம், நித்திய ஹோமம், தம்பதி பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்படாகி, 9:45 மணிக்கு மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை