உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அய்யனாரப்பன் கோவிலில்  வரும் 22ல் கும்பாபிஷேகம்

அய்யனாரப்பன் கோவிலில்  வரும் 22ல் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முத்தாம்பாளையத்தில் உள்ள பூரணி, பொற்கலை உடனுறை ஸ்ரீ அய்யனாரப்பன் சுவாமி கோவிலில் வரும் 22ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தையொட்டி, அய்யனாரப்பன் கோவிலில் வரும் 21ம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ேஹாமம், மகாலட்சுமி, நவக்கிரக ேஹாமங்கள், பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல்கால யாகசாலை பூஜைகள், புதிய சிலைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி காலை 6.30 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், ஹோமங்கள், 9.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10.30க்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, அக்கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி