உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / களையூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

களையூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

செஞ்சி: களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.செஞ்சி அடுத்த களையூர் முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து ஜீர்னோதாரண மகா கும்பாபிஷேகம் நாளை 16ம் தேதி நடக்க உள்ளது. இன்று 15ம் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, லட்சுமி, நக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், முதற்கால ஹோமம், இரவு 9 மணிக்கு மகாபூர்ணாஹூதியும் நடக்க உள்ளது. நாளை 16ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால ஹோமம், வேதிகார்ச்சனை, 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை