உள்ளூர் செய்திகள்

 மண்டல பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம், ரங்காநாதன் சாலை சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ மணிகண்ட ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மூலவர் மணிகண்ட ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு திரவிய அபிஷேகமும், படி பூஜையும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பஜனை நடந்தது. மணிகண்ட ஐயப்பன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை