சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் அச்சம்
விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாக சாலையை ஆக்கிரமிக்கும் எருமை மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக சாலையில் தினந்தோறும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். இந்த சாலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் எருமை மாடுகள் கூட்டமாக மேய்வதும், சாலையில் படுத்துக் கொள்வதும் தொடர்கிறது.இதனால், அவ்வழியே செல்வோரும், வாகனங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.