உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அளவிலான எறிபந்து போட்டி ஒலக்கூர் அரசு பள்ளி மாணவியர் தேர்வு

மாநில அளவிலான எறிபந்து போட்டி ஒலக்கூர் அரசு பள்ளி மாணவியர் தேர்வு

திண்டிவனம்: ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர், மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தகுதி பெற்றனர். விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில், வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான எறிபந்து போட்டிகள் கடந்த 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இதில், ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று, ராணிப்பேட்டையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியை தீபலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர்கள் சகாயமேரி, வடிவேல் பாராட்டினர். இப்பள்ளி மாணவியர்கள் தொடர்ந்து 5வது முறையாக மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !